பிரதமர் நரேந்திர மோடி அரசு பயணமாக வங்கதேசத்துக்கு சென்றுள்ளார். அங்கு சத்கிரா மாவட்டத்தில் உள்ள மிகப் பழைமையான ஜெசோரேஸ்வரி காளி கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.
இந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில் உள்ள ஈஸ்வரிபூர் என்ற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. எல்லை அருகே இரு நாடுகளை சேர்ந்த பக்தர்களிடமும் இக்கோயில் மிகப் பிரபலம்.
இந்நிலையில், இக்கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றபோது அவருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மோடி தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டார்.
மேலும், கையால் வடிவமைக்கப்பட்ட மகுடம் ஒன்றையும் காளிக்கு வழங்கினார். வெள்ளி மற்றும் தங்கத்தினால் ஆன இந்த மகுடம், பாரம்பரிய கைவினைஞர்களால் மூன்று வாரங்களாக உருவாக்கப்பட்டது என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காளி வழிபாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “இந்த புனித கோயிலுக்கு வந்து மாகாளியிடம் பிரார்த்தனை செய்ய நல் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா கொள்ளை நோயிடம் இருந்து உலகமே விடுவிக்கப்பட வேண்டுமென காளியிடம் வேண்டிக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில் உள்ள ஈஸ்வரிபூர் என்ற கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. எல்லை அருகே இரு நாடுகளை சேர்ந்த பக்தர்களிடமும் இக்கோயில் மிகப் பிரபலம்.
இந்நிலையில், இக்கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றபோது அவருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மோடி தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டார்.
மேலும், கையால் வடிவமைக்கப்பட்ட மகுடம் ஒன்றையும் காளிக்கு வழங்கினார். வெள்ளி மற்றும் தங்கத்தினால் ஆன இந்த மகுடம், பாரம்பரிய கைவினைஞர்களால் மூன்று வாரங்களாக உருவாக்கப்பட்டது என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காளி வழிபாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “இந்த புனித கோயிலுக்கு வந்து மாகாளியிடம் பிரார்த்தனை செய்ய நல் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா கொள்ளை நோயிடம் இருந்து உலகமே விடுவிக்கப்பட வேண்டுமென காளியிடம் வேண்டிக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.