ஆப்நகரம்

பிரதமர் மோடிக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருது அறிவிப்பு!

மோடிக்கு ’புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கும் அரசாணைக்கு கையெழுத்திட்டு ரஷ்ய அதிபர் புடின் சம்மதம் தெரிவித்தார்.

Samayam Tamil 12 Apr 2019, 5:35 pm
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மோடி, பல்வேறு உலக நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கான ஏராளமான சர்வதேச பயணங்கள் மேற்கொண்டார்.
Samayam Tamil Modi and Putin


மேலும் சர்வதேச பிரச்சனைகளுக்கு எதிராகவும், பல்வேறு நாடுகளின் நலனுக்காகவும் மோடி குரல் கொடுத்து வருகிறார். இதற்காக பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சி, சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஐ.நாவின் மிக உயரிய சூற்றுச்சூழல் விருதான “சாம்பியன்ஸ் ஆப் எர்த்” மோடிக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகமும், தங்கள் நாட்டின் உயரிய விருதான ‘சயீத்’தை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் தற்போது ரஷ்யாவின் மிக உயரிய விருதான “புனித ஆண்ட்ரூ” மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்த சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இதற்கு ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இருதரப்பு நட்புறவில் ஆழமான அடித்தளம் இடப்பட்டுள்ளது. வருங்காலத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு மிக பிரகாசமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி