இலங்கையில், தமிழ் மக்கள் வசிக்கும் மத்திய மாகாணப் பகுதியில் புதிய மருத்துவமனை ஒன்றை, பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார்.
உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர், கவுதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். புத்தர் பிறந்தநாளாகவும், ஞானம் பெற்று முக்திப்பேற்றினை எய்திய தினமாகவும், புத்த மதத்தினரின் புத்தாண்டாகவும் ‘வேசக்’ தினம் கருதப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த தினம் புத்த பூர்ணிமா என்றழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் வேசக் தினத்தையொட்டி 12-ம் தேதியில் இருந்து (இன்று) 14-ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு ஒன்றை புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்த ஐ.நா., சபை தீர்மானித்தது.
இந்த மாநாட்டை, பிரதமர் மோடி தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதற்காக, அவர் டெல்லியில் இருந்து நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றார். இன்று காலை மாநாட்டை, குத்துவிளக்கு ஏற்றி மோடி தொடங்கி வைத்தார்.
இதன்பின், மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்குள்ள மலையகப் பகுதிகளில் தமிழர்கள் குறிப்பாக, இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
அவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ரூ.150 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனை ஒன்றையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, அங்குள்ள தமிழர்களிடையே பேசிய அவர், இலங்கையில் சமத்துவம் நிலவவும், தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா தொடர்ந்து உதவி புரிந்துவருவதாகக் குறிப்பிட்டார்.
PM Narendra Modi inaugurated the Dickoya hospital for Sri lankan Tamils.
உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர், கவுதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். புத்தர் பிறந்தநாளாகவும், ஞானம் பெற்று முக்திப்பேற்றினை எய்திய தினமாகவும், புத்த மதத்தினரின் புத்தாண்டாகவும் ‘வேசக்’ தினம் கருதப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த தினம் புத்த பூர்ணிமா என்றழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் வேசக் தினத்தையொட்டி 12-ம் தேதியில் இருந்து (இன்று) 14-ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு ஒன்றை புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்த ஐ.நா., சபை தீர்மானித்தது.
இந்த மாநாட்டை, பிரதமர் மோடி தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதற்காக, அவர் டெல்லியில் இருந்து நேற்று இலங்கை புறப்பட்டுச் சென்றார். இன்று காலை மாநாட்டை, குத்துவிளக்கு ஏற்றி மோடி தொடங்கி வைத்தார்.
இதன்பின், மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்குள்ள மலையகப் பகுதிகளில் தமிழர்கள் குறிப்பாக, இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
அவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ரூ.150 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனை ஒன்றையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, அங்குள்ள தமிழர்களிடையே பேசிய அவர், இலங்கையில் சமத்துவம் நிலவவும், தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா தொடர்ந்து உதவி புரிந்துவருவதாகக் குறிப்பிட்டார்.
PM Narendra Modi inaugurated the Dickoya hospital for Sri lankan Tamils.