ஆப்நகரம்

பீதிக்குள்ளான அமெரிக்க நாடாளுமன்றம் மீண்டும் திறப்பு

மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன் உள்ளே நுழைந்ததாக எச்சரிக்கை விடப்பட்டதால் மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது.

TOI Contributor 8 Jul 2016, 8:09 pm
வாஷிங்டன்: மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன் உள்ளே நுழைந்ததாக எச்சரிக்கை விடப்பட்டதால் மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது.
Samayam Tamil police give all clear to reopen locked down capitol buildings
பீதிக்குள்ளான அமெரிக்க நாடாளுமன்றம் மீண்டும் திறப்பு


முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் மர்ம நபர் ஒருவர், அதாவது மர்ம பெண் ஒருவர் துப்பாகியுடன் நுழைந்துள்ளார் என்றும், அவர் கட்டடத்தின் அடிப் பகுதியில் மறைந்துள்ளார் என்றும் எச்சரிக்கை விடப்பட்டதால், நாடாளுமன்றம் மூடப்பட்டது.

தொடர்ந்து நாடாளுமன்ற வளாக போலீசார் நிகழ்த்திய சோதனைக்கு பின்னர், அக் கட்டடம் திறக்கப்பட்டது.

மர்ம நபர் ஒருவர் ஆயுதத்துடன் உள்ளே நுழைந்ததாக எச்சரிக்கை விடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அந்நாட்டு போலீசாரால் கறுப்பினத்தவர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டிக்கும் விதத்தில் டல்லாஸ் நகரில் நடந்த பேரணியின் போது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் போலீசார் 4 பேர் உயரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி