ஆப்நகரம்

போர்ச்சுகலில் 62 பேரை பலி வாங்கிய புவிவெப்பமடைதல்!

புவி வெப்பமடைதலினால், போர்ச்சுக்கல்லில் இருக்கும் ஒரு பெரிய வனப்பகுதி, கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் நிலையில், சுமார் 60 பேரின் உயிரிழந்துள்ளனர்.

TOI Contributor 21 Jun 2017, 12:58 pm
புவி வெப்பமடைதலினால், போர்ச்சுக்கல்லில் இருக்கும் ஒரு பெரிய வனப்பகுதி, கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் நிலையில், சுமார் 60 பேரின் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil portugal fires varzeas mourns villagers who fled
போர்ச்சுகலில் 62 பேரை பலி வாங்கிய புவிவெப்பமடைதல்!


புவி வெப்பமடைதல் எனபது கால நிலையில் ஏற்படும் மாற்றமாகும். கார்பன் டை ஆக்சைடு (CO2), பிற காற்று மாசுபாடுகள் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வளிமண்டலத்தில் சேகரிக்கப்பட்டு அவை சூரிய ஒளி, சூரிய கதிர்வீச்சை உறிஞ்சி, பூமியின் மேல் பரப்பில் இருந்து விலகியிருக்கும் போது இந்த புவி வெப்பமடைதல் ஏற்படுகிறது.

இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் போர்ச்சுகல்லில் மட்டும் சுமார் 104 பேரன்ஹீட்டுக்கும் மேலான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனிலிருந்து வடக்கே 120 மைல் தொலைவில், பெட்ரோகா கிராண்டே வனப்பகுதியில் கடந்த ஞாயிறு தீப்பிடிக்க ஆரம்பித்தது.

இந்த தீ மளமளவென்று பரவி அருகில் இருக்கும் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளில் பலர் பலியாகினர். இதுவரை இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 62 என போர்ச்சுக்கல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், தீக் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதையடுத்து அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை போர்ச்சுக்கல்லில் ஏற்பட்ட தீ விபத்துக்களில் இதுவே மிகப்பெரிய தீ விபத்தாகும்.

Portugal’s prime minister has called on the emergency services to explain their response to the country’s worst wildfire as public anger mounts over the tragedy. At least 64 people have been killed and more than 150 injured.

அடுத்த செய்தி