ஆப்நகரம்

திடீரென சூழ்ந்த இருள்; பொதுமக்கள் அதிர்ச்சி - பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு!

நாட்டின் பல்வேறு நகரங்கள் திடீரென இருளில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Jan 2021, 3:41 pm
பாகிஸ்தான் நாட்டின் மின்சார விநியோக கட்டமைப்பில் நேற்று இரவு 11.41 மணியளவில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டின் மின்சார விநியோகத்தையும் பெரிதும் பாதித்துள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. குறிப்பாக கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முதான் உள்ளிட்ட நகரவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் இணையவசதியும் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அந்நாட்டு மின்சாரத்துறை அமைச்சர் உமர் ஆயுப் கான் கூறுகையில், மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ச்சியாக முயன்று வருகின்றனர்.
Samayam Tamil Power Cut in Pakistan


தற்போது இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், முல்தான், கராச்சி, ஃபைசலாபாத் ஆகிய நகரங்களில் சில இடங்களில் முழுவதுமாகவும், சில இடங்களிலும் பகுதியாகவும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இயல்பு நிலை திரும்புவதற்கு மேலும் சில மணி நேரங்கள் ஆகும் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் #BlackOut என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் ட்ரெண்டானது.

கடலில் விழுந்து நொறுங்கிய போயிங் விமானம்; 62 பயணிகளின் நிலை என்ன?
அதிகாலை 2.18 மணிக்குள் 52,800 ட்வீட்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. சிலர் எதிர்மறையாகவும் விமர்சனம் செய்துள்ளனர். அதாவது, கடைசியில் பாகிஸ்தானில் Night Mode-ஐ இம்ரான் கான் அறிமுகம் செய்து வைத்திருப்பதாக ஒரு பயனாளர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், விடியும் வரை பாகிஸ்தானியர்கள் அனைவரும் ட்விட்டரில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக செயல்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்காகவும் நாம் பிரார்த்திக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மின்சாரத்திற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்று நம்புவதாக பதிவிட்டிருக்கிறார்.

17 வருடங்கள் கழித்தும் ட்ரெண்டிங்கில் கமல்!!
கடந்த 2015ஆம் ஆண்டு முக்கிய மின்சார கட்டமைப்பில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் 80 சதவீதப் பகுதிகள் இருளில் மூழ்கின. மேலும் சர்வதேச விமான நிலையங்களும் மோசமான பாதிப்பிற்கு ஆளாகின. இது அந்நாட்டு வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் ஆகும்.

அடுத்த செய்தி