ஆப்நகரம்

சீனாவில் கொடுமை.. கருவில் இருக்கும் குழந்தை உதைத்ததால் தாய்க்கு வயிறு கிழிந்தது!

சீனாவில் ஒரு பெண்ணின் கருவில் இருந்த குழந்தை உதைத்ததால், அவரின் வயிறு கிழிந்து சிறிய துளை ஏற்பட்டுள்ளது.

TNN 17 Oct 2017, 9:44 pm
பெய்ஜிங்: சீனாவில் ஒரு பெண்ணின் கருவில் இருந்த குழந்தை உதைத்ததால், அவரின் வயிறு கிழிந்து சிறிய துளை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil pregnant woman nearly dies after unborn baby kicks through womb
சீனாவில் கொடுமை.. கருவில் இருக்கும் குழந்தை உதைத்ததால் தாய்க்கு வயிறு கிழிந்தது!


ஒரு குழந்தை கருவில் சுமார் 9 - 10 மாதங்கள் இருக்கும். அப்படி குழந்தை கருவில் இருக்கும் குழந்தை நன்கு வளர்ச்சியடையும் போது, அதன் அசைவுகள், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நன்றாக தெரியும். அவ்வப்போது குழந்தை உதைக்கும் செயலும் நடக்கும். இப்படி சாதாரணமாக நடக்கும் செயல், விபரீதமாக முடிந்துள்ளது சீனாவில்.

இப்படி கர்ப்பமாக இருந்த சீனாவைச் சேர்ந்த ஷாங்க் என்ற 35 வயதான பெண்ணின் வாழ்க்கையில் தன் வயிற்றில் இருந்த குழந்தையின் செயல் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வயிற்றில் இருந்த குழந்தை உதைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தது. அது சாதாரணமாக தொடங்கி மிக அதிகரித்துள்ளது.இதனால் அவரின் வயிற்றில் அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. அப்படி குழந்தை உதைத்த போது, அவரின் வயிற்றில் ஒரு துளை உருவாகி ரத்தம் வெளியேர ஆரம்பித்திருக்கிறது.



இதையடுத்து மருத்துவமனையில் சோதனை செய்ததில், ஏற்கனவே அந்த பெண்ணுக்கு சிறுநீர் பை நீக்கத்திற்கு செய்யப்பட்ட ஆப்ரேஷனால் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதோடு, பலவீனமான பகுதியில் துளை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி