ஆப்நகரம்

சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாகூப் - மோடி சந்திப்பு; புகழ்பெற்ற ‘ஷாங்கரி லா’ நிகழ்வில் உரை!

பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூபை சந்தித்து பேசினார்.

Samayam Tamil 1 Jun 2018, 9:19 am
சிங்கப்பூர்: பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூபை சந்தித்து பேசினார்.
Samayam Tamil PM Modi


பிரதமர் மோடி ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலில் இந்தோனேசியா சென்ற அவர், நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.

அங்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங் உடன் வர்த்தக கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது மொபைல் பணப்பரிமாற்ற ’ஆப்’களை அறிமுகம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று காலை சிங்கப்பூர் அதிபர் மாளிகைக்கு சென்றார். அங்கு மோடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, பிரதமர் லீ சியன் லூங் உடனிருந்தார். இதையடுத்து அதிபர் ஹலிமா யாகூப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ‘ஷாங்கரி லா’ உரையாடலில் மோடி பங்கேற்று பேசுகிறார்.

அதில் முக்கியமான ’சாகர்மாலா’ திட்டம் குறித்து பேசவுள்ளார். ‘ஷாங்கரி லா’ உரையாடலில் பங்கேற்று பேசும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Prime Minister Narendra Modi meets President of Singapore Halimah Yacob at the Istana.

அடுத்த செய்தி