ஆப்நகரம்

Narendra Modi: சிங்கப்பூர் மாரியம்மனை தரிசனம் செய்து பிரதமர் மோடி வழிபாடு!

சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார்.

Samayam Tamil 2 Jun 2018, 12:54 pm
சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார்.
Samayam Tamil modi mariyamman


அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, தற்போது சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வரும் பிரதமர் மோடி, இன்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் உடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, மகாத்மா காந்தியின் நினைவிடங்களுக்கு கோ சோக் டாங் உடன் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்பின்னர், சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை கோயில் நிர்வாகிகளும், அதிகாரிகளும் வரவேற்றனர்.

அடுத்த செய்தி