ஆப்நகரம்

பிரிட்டன் இளவரசர் திருமணம்: லண்டனில் தங்கும் விடுதியில் ரூம் இல்லை !

பிரிட்டன் இளவரசரின் திருமணத்தை காண பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிக மக்கள் வந்துள்ளாதால், லண்டனில் தங்குவதற்கு அறைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 May 2018, 1:13 pm
பிரிட்டன் இளவரசரின் திருமணத்தை காண பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிக மக்கள் வந்துள்ளாதால், லண்டனில் தங்குவதற்கு அறைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil meghan-markle-prince-harry-marriage-will-it-last-942368


பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இவரது திருமணத்தை காண இளவரசரின் ஆதரவாளர்கள் மற்றும் விருந்தினர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ளனர். இந்த திருமணமானது லிண்ட்சர் நகரில் நடைபெறுகிறது, லிண்ட்சர் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் விடுதிகளும் முழுமையாக நிரம்பிவிட்டது. இதனால் இளவரசர் ஹாரி திருமணத்தை காண வருபவர்களுக்கு லண்டனில் அறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பலர் சாலையோரங்களில் தற்காலிகமாக டெண்ட் அமைத்துதங்கியுள்ளனர். இதனால் உடனடியாக வேறு தங்கும் வசதிகள் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இளவரசர் ஹாரி திருமணத்திற்காக பெரிய கேக் தயாராகி வருகிறது. லண்டனை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் கிளேர் டக் என்பவர் திருமணத்துக்கான கேக்கை உருவாக்க உள்ளார். மேலும் திருமணத்தின் சாரெட் வண்டியின் ஊர்வலத்திற்காக பிரிட்டன் ராணுவத்தினர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி