ஆப்நகரம்

அமெரிக்கா மற்றும் லண்டனில் தாக்குதல்: ஐஎஸ் மிரட்டல்

அமெரிக்கா மற்றும் லண்டன் நகரில் உள்ள விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

TNN 2 Jul 2016, 2:47 pm
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் லண்டன் நகரில் உள்ள விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
Samayam Tamil pro isis twitter account threatens attacks at london heathrow lax and jfk on july 4
அமெரிக்கா மற்றும் லண்டனில் தாக்குதல்: ஐஎஸ் மிரட்டல்


இதுகுறித்து ஐஎஸ் தீவிரவாதிகளின் சார்பு டுவிட்டர் பக்கத்தில் விடப்பட்டுள்ள மிரட்டல் செய்தியில், லண்டன் நகரில் உள்ள ஹீத்ரோவ் விமான நிலையம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஜான் எஃப் கென்னடி உள்ளிட்ட விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஹீத்ரோவ் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா வரும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் சுதந்திர தினமான வருகிற 4-ம் தேதியன்று இந்த தாக்குதல் நடத்தப்படும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை "சைட்" (SITE) எனும் புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் முடிந்து மூன்று நாட்களில் வந்த இந்த மிரட்டலை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் பாதுகாப்ப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி