ஆப்நகரம்

’அருங்காட்சியகங்களுக்கு செல்லுங்கள்'-நிவாரண நிதி திரட்ட இத்தாலி புது யுக்தி..!

இத்தாலியில் உள்ள அருங்காட்சியகங்களின் மூலம் கிடைக்கும் வருமானம்,அந்நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கான நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளது.

TNN 28 Aug 2016, 4:31 pm
இத்தாலியில் உள்ள அருங்காட்சியகங்களின் மூலம் கிடைக்கும் வருமானம்,அந்நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கான நிவாரண நிதியாக வழங்கப்பட உள்ளது.
Samayam Tamil proceeds from museums to help italian earthquake relief efforts
’அருங்காட்சியகங்களுக்கு செல்லுங்கள்'-நிவாரண நிதி திரட்ட இத்தாலி புது யுக்தி..!


கடந்த வாரம் இத்தாலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள அக்குமோலி, அமாட்டீரிஸ், போஸ்டோ, ஆர்குட்டா ஆகிய நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களும் பலத்த பாதிப்புக்கு உள்ளாகின.இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
உயிரிழப்புகள் மட்டுமின்றி,பல்லாயிரக்கணக்கான கோடிக்கு சேதத்தையும் இந்த நிலநடுக்கம் ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த நிலநடுக்கத்திற்கான நிவாரண நிதி திரட்டும் வகையில் ஒரு புதிய வேண்டுகோளை அந்நாட்டு அரசு விடுத்துள்ளது.

இத்தாலி நாட்டில் உள்ள அனைத்து அருங்காட்சியங்களின் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைக்கும் நிதியானது,நிலநடுக்கத்திற்கான நிவாரண பணிகளுக்கு அளிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எனவே இத்தாலி மக்கள் அனைவரும் நிவாரண நிதி வழங்கும் வகையில் இன்று அந்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களை பார்வையிட செல்ல வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இத்தாலியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களையும் அந்நாட்டு மக்கள் பெருமளமவில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

அடுத்த செய்தி