ஆப்நகரம்

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவில் போராட்டம்-

அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று மலேசியா சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக, அங்குள்ள மலேசிய வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Samayam Tamil 31 May 2018, 7:51 pm
அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று மலேசியா சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக, அங்குள்ள மலேசிய வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Samayam Tamil modi malaysia


பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இன்று மலேசியா சென்றார். மலேசிய அரசு சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மலேசிய பிரதமர் மகாதீரைச் சந்தித்த அவர், இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே மோடியின் வருகை குறித்து அறிந்த மலேசிய வாழ் தமிழ்மக்கள், ஸ்டெர்லைட் பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் மலேசிய ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினர். அப்போது தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சிதைக்காதே, மோடியே எங்கள் எதிரி என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கரகோஷம் எழுப்பினர்.

அடுத்த செய்தி