ஆப்நகரம்

புதுச்சேரி வாலிபர் துபாயில் தூக்கிட்டு தற்கொலை

துபாயில் புதுச்சேரி வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 15 Oct 2017, 10:18 am
துபாயில் புதுச்சேரி வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil pudcherry married man suicide in dubai
புதுச்சேரி வாலிபர் துபாயில் தூக்கிட்டு தற்கொலை


புதுச்சேரியை சேர்ந்த ஜோ பிரசாந்த் என்பவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் எலக்டீரிசயனாக வேலை செய்து வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இவருடைய மனைவி மற்றும் 2 வயது மகள் புதுச்சேரியில் உள்ளனர்.

இந்நிலையில், ஜோ பிரசாந்தின் மனைவிக்கும் வேறொருவருக்கும் தொடர்பு இருந்துள்ளதாக, அவருடைய உறவினர்கள் ஜோவிடம் கூறியுள்ளனர்.

இதில் மனமுடைந்த அவர், விடுமுறையில் புதுச்சேரி வந்து, மனைவியை எச்சரித்துள்ளார். தொடர்நது, விவாகரத்து கோரி விண்ணப்பித்து விட்டு, கடந்த 1ம் தேதி புதுச்சேரி திரும்பியுள்ளார்.

இந்நிலையில், தான் தற்கொலை செய்யப்போவதாக ஸ்கைப் மூலம் மனைவியிடம் கூறிவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இது குறித்து வழக்கப் பதிவு செய்து துபாய் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி