ஆப்நகரம்

தடுப்பூசி போடாமல் விமானத்தில் ஏறமுடியாது: புதிய கண்டீஷன்!

விமானத்தில் ஏறுவதற்கு முன் தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற விதிமுறை அமல்படுத்தப்படவிருப்பதாக கண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Nov 2020, 5:58 pm

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச விமானப் போக்குவரத்துக்கும், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்தன.
Samayam Tamil விமானம்


இதையடுத்து லாக்டவுன் தளர்வுகள் மூலம் படிப்படியாக விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், சர்வதேச விமானங்களில் பயணிப்போர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டுமென ஆஸ்திரேலியாவை சேர்ந்த கண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா தடுப்பூசி இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வந்தபிறகு அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் தடுப்பூசி போடும் முறை அமல்படுத்தப்படும் என்று கண்டாஸ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஆலன் ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்: ஆட்சி மாற்றம் தொடங்கியது!

இதுகுறித்து அவர் பேசியபோது, “சர்வதேச பயணிகளுக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன்படி, விமானத்தில் ஏறுவதற்கு முன் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படும்.

உள்நாட்டு விமானப் பயணத்துக்கும் தடுப்பூசி தேவையா என்பதை மார்கெட் நிலவரத்தை பார்த்தபிறகே முடிவுசெய்ய முடியும். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம் என கருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி