ஆப்நகரம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி; 90 பேர் படுகாயம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிகழ்ந்துள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்; 90க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

TNN 11 Feb 2017, 1:42 pm
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிகழ்ந்துள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்; 90க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil quake in philippines kills at least 15 injures 90
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி; 90 பேர் படுகாயம்!


அந்நாட்டின் சுரிகாவ் டெல் நார்த் மாகாணத்தின் தலைநகரில் இருந்து 14 கிலோ மீட்டர் வடமேற்கே, 11 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் மதிப்புடைய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பல இடங்களில் வீடுகள், அலுவலகக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

மேலும், அங்குள்ள சுரிகாவ் விமான நிலையத்திலும் கடும் சேதம் ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால், மின்சாரம் தடைபட்டு, பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். பலர் உறங்கிய நிலையிலேயே, தரையில் புதையுண்டனர்.

இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில், 15 பேர் உயிரிழந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. மேலும், 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, மக்கள் நெருக்கம் மிகுந்த ஒன்று என்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

A powerful nighttime earthquake in the southern Philippines killed at least 15 people, injured about 90 others, damaged buildings and an airport and knocked out power, officials said on Saturday.

அடுத்த செய்தி