ஆப்நகரம்

சிரியாவின் இட்லிப் நகரில் வான்வழித் தாக்குதல்: 7 குழந்தைகள் பலி

சிரியாவின் இட்லிப் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும் 2 கர்ப்பிணிகள் பலியாகினர்.

TNN 8 Nov 2016, 9:30 pm
டமாஸ்கஸ்: சிரியாவின் இட்லிப் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும் 2 கர்ப்பிணிகள் பலியாகினர்.
Samayam Tamil raid kills 7 children 2 pregnant women in syria rebel stronghold
சிரியாவின் இட்லிப் நகரில் வான்வழித் தாக்குதல்: 7 குழந்தைகள் பலி


சிரிய ஆதரவு ரஷ்யப் படைகள் இட்லிப் மாகாணத்தின் தெற்கே அமைந்துள்ள கான் ஷேய்குன் பகுதியில் வான் வழித் தாக்குதல் நடத்தின. நகரின் பல்வேறு பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தின. இதில் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த 7 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 2 கர்ப்பிணி பெண்களும் உயிரிழந்தனர்.

இர்லிப் நகரின் பல்வேறு பகுதிகளை போராட்டக் குழுவினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். அவர்களிடம் அப்பகுதிகளை மீட்க, ரஷ்யாவுடன் இணைந்து சிரிய அரசுப் படைகள் கடும் சண்டையிட்டு வருகின்றன.

At least seven children and two pregnant women were killed in an air strike on Syria's rebel stronghold province of Idlib on Tuesday, a monitor said.

அடுத்த செய்தி