ஆப்நகரம்

நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி... வாயை பொத்திக்கொண்ட பேச்சாளர்... பரபரப்பு வீடியோ

ஸ்பெயின் நாட்டில் பாராளுமன்றத்தில் புகுந்த எலியால் அதிர்ச்சியில் ஆழ்ந்த உறுப்பினர்கள்

Samayam Tamil 22 Jul 2021, 3:01 pm
ஸ்பெயின் நாட்டில் கடந்த புதன்கிழமை அன்று (நேற்று) பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடியது. அதில், முன்னாள் பிராந்திய ஜனாதிபதியான சுசானா டயஸை அண்டலூசியாவின் செனட்டராக தேர்வு செய்வதை குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
Samayam Tamil Marta Bosquet


அப்போது, உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு அடியில் இருந்து எலி ஒன்று வெளியே வருவதை கண்டந்தும் பிராந்திய பேச்சாளர் மார்டா போஸ்கெட் திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டு அதிர்ச்சியில் வாயை பொத்திக்கொண்டார்.

அதை சுதாரித்துக்கொண்ட உறுப்பினர்கள் அனைவரும், மேசையை விட்டு வெளியேறிய முயன்றனர். அப்போது, அந்த எலி நாற்காலியின் அடியில் சிக்கிக்கொள்ள உறுப்பினர்கள் அனைவரும் அலற தொடங்கினர்.


இதனால், நாடாளுமன்றம் சிறிது நேரம் பரபரப்பில் ஆழ்ந்தது. பின்னர் எலி அங்கிருந்து அகற்றப்பட்டதும் அனைவரும் கைகளை தட்டி மகிழ்ந்தனர்.

மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா; அமலாகுமா கடுமையான ஊரடங்கு?

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி ' ஒரு எலிக்கு இத்தனை போராட்டமா ' என்றும் இதற்கெல்லாமா கைகளை தட்டி ஆரவாரப்படுத்துவது என நெட்டிசன்கள் ஆச்சரியமாக கேட்பதுடன், எங்கள் ஊர் அரசியல் வாதிகள் எலியை வைத்தும் ஜோக் அடிப்பார்கள் என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி