ஆப்நகரம்

சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி;

சீனாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி ஒன்று பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகிறது.

TNN 22 Sep 2017, 6:56 pm
காடு, மலை, நீர்நிலைகள், புல்வெளிகள் போன்றவற்றைப் பார்த்தாலே மனிதனின் மனம், போர், அரசியல் எல்லாவற்றையும் மறந்து அமைதியடையும்.
Samayam Tamil red river in china
சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி;


ஆனால், அதே நீர்நிலைகள் பல வண்ண நிறங்களில் வானவில் போன்று இருந்தால் எப்படி இருக்கும். கேட்பதற்கே அத்தகைய கற்பனை ஏரியை பார்க்க நமது மனம் விரும்புகிறது அல்லவா.

அந்த வகையில், சீனாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி ஒன்று பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகிறது.

சீனாவில் .உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள என்செங் நகரத்தில் தான் இந்த உப்பு ஏரி உள்ளது. இதில் அதிகளவு உப்பு இருப்பதால், கடந்த நான்காயிரம் வருடங்களாக சீன மக்கள், இந்த நீரைதான் தொழி்ல் நிறுவனங்களுக்கு உப்பை உற்பத்தி செய்து வருகின்றனர்.

தொடக்கத்தில் மற்ற ஏரிகளைப் போன்று தான் இந்த ஏரியும் காட்சியளித்தது. ஆனால், தற்போது, அதில் உள்ள டுனாலியேல்லா சலினா என்ற பாசியினால், இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

டுனாலியேல்லா பாசியின், இயற்கை தன்மை என்னவென்றால், நீரினை நிறம் மாற்றும் இயல்பு கொண்டது.

இதனால், ஒரு பக்கம் பச்சை நிறத்திலும், மறு பக்கம் இளஞ்சிவப்பு நிறத்திலும் இந்த ஏரி காட்சியளிக்கிறது.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், சுற்றுலா பயணிகள், பார்வையாளர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த ஏரி இரத்த சிவப்பு நிறத்தில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி