ஆப்நகரம்

மாலத்தீவில் தொடரும் அரசியல் குழப்பம்; அதிபர் பதவிக்கு ஆபத்து!

அதிபர் தகுதிநீக்கம் செய்த 12 எம்பிக்களின் தகுதி நீக்கம் செல்லாது என மாலத்தீவு உச்சநீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்ததால், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிபர் அப்துல்லா யமீன் திட்டமிட்டுள்ளார்

Samayam Tamil 4 Feb 2018, 6:20 pm
மாலத்தீவு: அதிபர் தகுதிநீக்கம் செய்த 12 எம்பிக்களின் தகுதி நீக்கம் செல்லாது என மாலத்தீவு உச்சநீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்ததால், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிபர் அப்துல்லா யமீன் திட்டமிட்டுள்ளார்.
Samayam Tamil reinstated maldivian lawmakers enter parliament despite military deployment
மாலத்தீவில் தொடரும் அரசியல் குழப்பம்; அதிபர் பதவிக்கு ஆபத்து!


மாலத்தீவு அதிபரான அப்துல்லா யமீன், தன்னைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக முன்னாள் அதிபர் மீது குற்றம் சாட்டி அவரை நாடு கடத்தினார். மேலும், அதற்கு துணையாக இருப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் சிலரை சிறையில் அடைத்தார்.

இதையடுத்து, அவரது கட்சியைச் சேர்ந்த 12 எம்பிக்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்தால், அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அதிபரின் உத்தரவை செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.

இதனால், கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் பாராளுமன்றத்தில் நுழைய முற்பட்டதால், பாரளுமன்ற கூட்டத்தை அதிபர் யமீன் தள்ளிவைத்துள்ளார்.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் எதிர்கட்சியுடன் இணைந்ததால், அதிபர் யமீன் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர் திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி