ஆப்நகரம்

லண்டன் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு; ஏராளமானோர் படுகாயம்!

சுரங்க ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

TNN 15 Sep 2017, 2:21 pm
லண்டன்: சுரங்க ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil reports of explosion on london underground train
லண்டன் சுரங்க ரயிலில் குண்டுவெடிப்பு; ஏராளமானோர் படுகாயம்!


இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பார்சல்ஸ் கிரீம் சுரங்க ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று நண்பகல் நேரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். சத்தம் கேட்டு அலறிய பொதுமக்கள், தங்களைக் காப்பாற்றி கொள்ள ஓடினர்.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் போலீசாரும், மருத்துவ உதவியாளர்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுரங்க ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Reports of explosion on London underground train.

அடுத்த செய்தி