ஆப்நகரம்

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: பிரான்சில் வெடித்த கலவரம்!

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி தோல்வி எதிரொலியாக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் கலவரம் வெடித்துள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 19 Dec 2022, 12:16 pm
நடப்பாண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நேற்று கத்தாரில் நடைபெற்றது. அர்ஜெண்ட்டினா - பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் கூடுதல் நேரங்கள் கொடுக்கப்பட்டும் இறுதியாக 3-3 என்ற கோல் கணக்கில் ட்ரா ஆனது. இதையடுத்து, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.
Samayam Tamil பிரான்ஸ் கலவரம்
பிரான்ஸ் கலவரம்


அர்ஜெண்டினா அணியில் கேப்டன் மெஸ்ஸி இரண்டு கோல்களும், டி-மரியா ஒரு கோலும் போட்டனர். பிரான்ஸ் அணியில் எம்பாப்பே மட்டும் மூன்று கோல்கள் போட்டார். பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்தும், கோல் கீப்பர் மார்ட்டினெஸ் ஒரு கோலை தடுத்து அணியைக் காப்பாற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 1986ஆம் ஆண்டுக்கு பின்னர் அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது. அந்த ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது. அதேசமயம், பிரான்ஸ் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும் இறுதியில் தோல்வியை சந்தித்தது. கடந்த முறை சாம்பியனான பிரான்ஸ் அணியின் ஆட்டத்தை பார்க்க அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கத்தாருக்கு சென்றிருந்தார். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததும் பிரான்ஸ் வீரர்கள் மிகவும் சோகமடைந்தனர். அப்போது அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஒவ்வொருவரையும் கட்டியணைத்து சமாதானப்படுத்தினார்.

அணு ஆயுதத்தை பயன்படுத்தும் ரஷ்யா?..இந்தியா எச்சரிக்கை.!
இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி தோல்வி எதிரொலியாக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸில் வன்முறை வெடித்துள்ளது. பாரீஸில் உள்ள Champs-Elysees இல் கூடியிருந்த ரசிகர்க அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. பாரீஸில் உள்ள Champs-Elysees இல் கூடியிருந்த ரசிகர்களை கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி அந்நாட்டு போலீஸார் கலைத்தனர். கலவரத்தைத் தொடர்ந்து இதுவரை 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி