ஆப்நகரம்

பசி! தாகம்! உணவு, தண்ணீரின்றி தவிக்கும் ரோஹிங்கிய குழந்தைகள்!

போதிய உணவு மற்றும் தண்ணீரின்றி 3,40,000 ரோஹிங்கிய குழந்தைகள் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 20 Oct 2017, 5:07 pm
டாக்கா: போதிய உணவு மற்றும் தண்ணீரின்றி 3,40,000 ரோஹிங்கிய குழந்தைகள் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rohingya children are severely affected
பசி! தாகம்! உணவு, தண்ணீரின்றி தவிக்கும் ரோஹிங்கிய குழந்தைகள்!


மியான்மரில் வசித்து வந்த ரோஹிங்கிய முஸ்லீம்கள் மீதான வன்முறை சம்பவங்களால், அங்கிருந்து அகதிகளாக வெளியேறினர். அவர்கள் அருகிலுள்ள நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

வங்கதேசத்தில் ஏராளமான ரோஹிங்கிய அகதிகளுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு வசித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வரும் ரோஹிங்கிய அகதிகளை நாட்டின் அச்சுறுத்தல் என்று கூறி, வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் வங்கதேச முகாம்களில் அளவுக்கு அதிகமான அகதிகள் தங்கியிருப்பதால், அங்குள்ள 3,40,000 குழந்தைகள் உணவு, தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

மேலும் அவர்களின் இருப்பிடம் சுகாதாரமற்ற சூழலில் இருப்பதாக ஐ.நா சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

Rohingya children are severely affected.

அடுத்த செய்தி