ஆப்நகரம்

ரோஹிங்கியா முஸ்லீம்களைக் கொல்லும் கண்ணிவெடிகள்

மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்துவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

TNN 12 Sep 2017, 4:47 pm
மியான்மர் நாட்டில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அவர்கள் மியான்மரை விட்டு நீங்கி அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர்.
Samayam Tamil rohingya crisis civilians maimed by landmines
ரோஹிங்கியா முஸ்லீம்களைக் கொல்லும் கண்ணிவெடிகள்


இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்கள் அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் மியான்மரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் பயணிக்கும் பாதையில் கண்ணி வெடிகளை மண்ணில் புதைத்துவைத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இந்த கண்ணி வெடிகளில் சிக்கி குழந்தை உட்பட பலர் கால், கைகளை இழந்து உயிருக்குப் போராடுகின்றனர் என்று பிசிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி