ஆப்நகரம்

வங்கதேசத்தில் தஞ்சமடையும் முயற்சி; 97 ரோஹிங்கியாக்கள் நீரில் மூழ்கி பலி!

வங்கதேசத்தில் தஞ்சமடையும் முயற்சியில், 97 ரோஹிங்கியாக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

TNN 15 Sep 2017, 7:50 am
டாக்கா: வங்கதேசத்தில் தஞ்சமடையும் முயற்சியில், 97 ரோஹிங்கியாக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Samayam Tamil rohingya muslims tried to reach bangladesh ends with dead
வங்கதேசத்தில் தஞ்சமடையும் முயற்சி; 97 ரோஹிங்கியாக்கள் நீரில் மூழ்கி பலி!


மியான்மரின் ரக்ஹைன் மாநிலத்தில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக தூண்டப்பட்டுள்ள வன்முறைக் காரணமாக, 3,70,000 மக்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இவர்கள் தரை மற்றும் கடல் வழியாக, மியான்மர் எல்லையில் உள்ள நாப் ஆற்றின் வழியாக வங்கதேசத்தில் தஞ்சமடைகின்றனர். அவ்வாறான முயற்சியில் 97 ரோஹிங்கியாக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி அரக்கான ரோஹிங்கியா சல்வேசன் ஆர்மி எனும் ரோஹிங்கியா ஆயுதக் கிளர்ச்சிக் குழு காவல் மற்றும் ராணுவ அரண்களை தாக்கியதைக் காரணமாக, ரோஹிங்கியா கிராமங்களில் நுழைந்த மியான்மர் ராணுவமும் புத்த பேரினவாதிகளும் ஆயிரக்கணக்கான வீடுகளை எரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சர்வதேச மட்டத்தில் மியான்மருக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும், ரோஹிங்கியா மக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது.

Rohingya Muslims tried to reach Bangladesh ends with dead.

அடுத்த செய்தி