டாக்கா: மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்றுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு தங்குமிடங்கள் தயாராகி வருகின்றன.
மியான்மர் நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களாக திகழும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ வழியற்றவர்களாய் தவிக்கின்றனர்.
கடந்த மாதம் புத்த பிச்சுகளுடன் ஏற்பட்ட மோதலில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனால் அச்சம் கொண்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏராளமான ரோஹிங்கியாக்களின் வருகையால் வங்கதேச அரசு திணறி வருகிறது. தற்போது 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வங்கதேசத்தில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
அவர்கள் போதிய இருப்பிடமின்றி, சாலையோரம், வயல், மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சூழலில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்க 14,000 கூடாரங்கள் அமைக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
அவற்றை 10 நாட்களில் கட்டி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவை காக்ஸ் பஜார் மாவட்டம் குடுபலாங் பகுதியில் 2,000 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இந்த ஏற்பாட்டிற்கு ஐ.நா உதவி செய்வதாக தெரிவித்துள்ளது.
Rohingya Muslims will get shelters in Bangladesh.
மியான்மர் நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களாக திகழும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழ வழியற்றவர்களாய் தவிக்கின்றனர்.
கடந்த மாதம் புத்த பிச்சுகளுடன் ஏற்பட்ட மோதலில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனால் அச்சம் கொண்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏராளமான ரோஹிங்கியாக்களின் வருகையால் வங்கதேச அரசு திணறி வருகிறது. தற்போது 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வங்கதேசத்தில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.
அவர்கள் போதிய இருப்பிடமின்றி, சாலையோரம், வயல், மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சூழலில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்க 14,000 கூடாரங்கள் அமைக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
அவற்றை 10 நாட்களில் கட்டி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவை காக்ஸ் பஜார் மாவட்டம் குடுபலாங் பகுதியில் 2,000 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இந்த ஏற்பாட்டிற்கு ஐ.நா உதவி செய்வதாக தெரிவித்துள்ளது.
Rohingya Muslims will get shelters in Bangladesh.