ஆப்நகரம்

மியான்மருக்கு திரும்புவார்களா ரோஹிங்கியாக்கள்; அகதிகளின் உண்மை நிலை என்ன?

மியான்மருக்கு மீண்டும் திரும்புவது குறித்து, ரோஹிங்கிய அகதிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி காணலாம்.

Samayam Tamil 20 Jan 2018, 5:09 pm
டாக்கா: மியான்மருக்கு மீண்டும் திரும்புவது குறித்து, ரோஹிங்கிய அகதிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி காணலாம்.
Samayam Tamil rohingya refugees in bangladesh fear return to myanmar
மியான்மருக்கு திரும்புவார்களா ரோஹிங்கியாக்கள்; அகதிகளின் உண்மை நிலை என்ன?


ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் இன்னும் சில தினங்களில் மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். இந்நிலையில் ரோஹிங்கியா அகதிகளின் மனநிலைக் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம் பற்றிய சந்தேகங்களையும், அச்சங்களையும் ரோஹிங்கியா பிரதிநிதிகள் தங்கள் மனுவில் பட்டியலிட்டுள்ளனர்.

இதனை வங்கதேச அதிகாரிகளிடம் சமர்பிக்க இருக்கின்றனர். இவர்கள் மியான்மர் நாட்டின் ரக்ஹைனில் உள்ள 40 கிராமங்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். வங்கதேச முகாம்களில் உள்ள இவர்கள், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தங்கள் மனுவிலுள்ள கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதில்,

* மியான்மரில் நீண்ட காலமாக ரோஹிங்கியாக்களுக்கு மறுக்கப்பட்டு வரும் குடியுரிமையை வழங்குவதாக மியான்மர் அரசு அறிவிக்க வேண்டும்.

* மியான்மரின் அங்கீகரிக்கப்பட்ட இனக்குழுவாக ரோஹிங்கியா இனத்தை அறிவிக்க வேண்டும்.

* சிதைவடைந்த வீடுகள், மசூதிகள், பள்ளிக்கூடங்களை மீண்டும் கட்டித்தர வேண்டும்.

* ரோஹிங்கியா மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொலைக் குற்றங்கள், சூறையாடல்கள், பாலியல் வன்முறைகளுக்கு மியான்மர் ராணுவம் பொறுப்பேற்க வேண்டும்.

* ராணுவ தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட அப்பாவி ரோஹிங்கியாக்கள் விடுதலைச் செய்யப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைளை ஒப்புக்கொள்ளும் பட்சத்திலேயே மியான்மருக்கு திரும்பிச் செல்ல ரோஹிங்கியா முஸ்லீம்கள் சம்மதிப்பார்கள் என ரோஹிங்கியா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Rohingya Refugees In Bangladesh Fear Return To Myanmar.

அடுத்த செய்தி