ஆப்நகரம்

இலங்கையில் தவிக்கும் ரோஹிங்கியா அகதிகள்; மீண்டும் உருவானது சிக்கல்

இலங்கையில் தவிக்கும் ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 20 May 2017, 6:49 pm
கொழும்பு: இலங்கையில் தவிக்கும் ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil rohingya refugees may be transferred to another country by srilanka govt
இலங்கையில் தவிக்கும் ரோஹிங்கியா அகதிகள்; மீண்டும் உருவானது சிக்கல்


அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்ததாக இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் 30 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது. மியான்மரைச் சேர்ந்த இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் அகதிகளாக பதிவுச் செய்யப்பட்டவர்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் அதிராம்பட்டினத்தில் தங்கினர். இந்நிலையில் காங்கேசன்துறை கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மியான்மருக்கு நாடு கடத்தப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இந்தியா, பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் புக முயற்சித்து வருகின்றனர். நிலையான வாழ்வு என்ற அம்சத்திலேயே அவர்கள் ஆஸ்திரேலியா பயணத்தை தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கடல் வழியாக வரக்கூடிய அகதிகளை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பி வருவதுடன் தனது தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகளையும் பல்வேறு வழிகள் மூலம் வெளியேற்ற முயற்சி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Rohingya Refugees may be transferred to another country by Srilanka Govt.

அடுத்த செய்தி