ஆப்நகரம்

இத்தாலி மெட்ரோ நிலையத்தில் விபத்து, 20 போ் படுகாயம்

இத்தாலி தலைநகரான ரோம் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நகரும் படிக்கட்டை பயன்படுத்திய 20 போ் படுகாயம் அடைந்துள்ளனா்.

Samayam Tamil 24 Oct 2018, 8:39 pm
இத்தாலி தலைநகரான ரோம் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நகரும் படிக்கட்டை பயன்படுத்திய 20 போ் படுகாயம் அடைந்துள்ளனா்.
Samayam Tamil Rome


ரோம் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை பயன்படுத்திய 20 போ் படுகாயம் அடைந்தனா்.

இத்தாலியின் தலைநகரான் ரோம் நகரில் நேற்று ரோமா மற்றும் காஸ்கோ அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டி முடிவடைந்த நிலையில் ரசிகா்கள் அனைவரும் அருகில் இருந்த மெட்ரோல் ரயில் மூலம் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திருபிக் கொண்டு இருந்தனா். அந்த நேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்த நகரும் படிக்கட்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறைத் தொடா்ந்து நகரும் படிக்கட்டு வழக்கத்தை காட்டிலும் மிகவும் வேகமாக இயங்கியது. இதை எதிா்பாராத பொதுமக்கள் அடுத்தடுத்து கீழே விழுந்தனா். இந்த விபத்தில் சுமாா் 20 போ் படுகாயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகா்கள் சிலா் நகரும் படிக்கட்டில் வேகமாக குதித்ததாகவும், அதிா்வு காரணமாக இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி