ஆப்நகரம்

இன்ஜினில் பறவைகள் சிக்கியதால், அவசர அவசரமாக வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்!

பயணிகள் விமானத்தில் பறவைகள் மோதியதால், அவசர அவசரமாக அருகில் இருந்த வயல்வெளியில் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது.

Samayam Tamil 15 Aug 2019, 5:55 pm
ரஷ்யாவில் பயணிகள் விமானத்தின் இன்ஜினில் பறவைகள் சிக்கியதால், அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
Samayam Tamil russian airbus


ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து ‘யூரல் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சுமார் 233 பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. வானத்தில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, பறவைகள் கூட்டம்கூட்டமாக வந்தது.

பறவை கூட்டத்தை சமாளித்து கடந்து கொண்டிருக்கையில், ஒரு சில பறவைகள் விமானத்தின் இன்ஜினில் இழுக்கப்பட்டது. இதனால், இன்ஜினில் பறவை சிக்கி விமானத்தை தடுமாறச் செய்தது. இதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட விமானி, உடனே அவசர அவசரமாக அருகில் உள்ள விமான நிலையத்தை தொடர்பு கொண்டார்.

ஆனால், விமானத்தின் நிலை மோசமாக, பாதுகாப்பு கருதி அப்படியே தரையிறக்கம் செய்யப்பட்டது. நல்ல வேளையாக விமானம் தரையிறங்கும் பகுதியில் கட்டிடங்கள், குடியிருப்புகள் எதுவும் இல்லாமல், மக்காச் சோளம் வயல் வெளியாக இருந்தது. இதனால் விமானம் நேராக வயல்வெளிப் பகுதியில் தரையிறக்கப்பட்டது.

பின்பு விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. ஒரு சில பயணிகளுக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானியின் சாதூர்யத்தால், விமானத்துக்கும், பயணிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

அடுத்த செய்தி