ஆப்நகரம்

நான் மிகவும் வருத்தப்படுகிறேன்: அனில் அகர்வால்

தூத்துக்குடியில் நடைபெற்ற துர்தர்ஷ்டவசமான சம்பவத்துக்கு வருத்தப்படுவதாக வேதாந்த குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 May 2018, 4:45 pm
தூத்துக்குடியில் நடைபெற்ற துர்தர்ஷ்டவசமான சம்பவத்துக்கு வருத்தப்படுவதாக வேதாந்த குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anil agarwal


ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி வரும் வேதாந்த குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது.


ஆலையை மீண்டும் இயக்குவதற்காக நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் நெறிபிறழாமல் பின்பற்றி வருகிறோம். இதே போல், தூத்துக்குடி வாழ் மக்களின் நலனிலும் நாங்கள் முழு அக்கறையோடு இருக்கிறோம். அவர்களின் ஆசியோடு, ஸ்டெர்லைட் வர்த்தகம் தொடர்ந்து செயல்படும். சுற்றுச்சுழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் ஆலை முழு அர்பணிப்போடு உள்ளது என்பதை மீண்டும் உறுதிபட கூறிக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி