ஆப்நகரம்

இந்திய பயணிகளுக்கு சவுதி அரேபியா தடை!

இந்தியாவில் இருந்து பயணிப்போருக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது.

Samayam Tamil 23 Sep 2020, 6:01 pm

கொரோனா வைரஸ் கடந்த ஒன்பது மாதங்களாக உலகையே துன்புறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதன்முதலாக சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன்பின் படிப்படியாக உலகம் முழுவதும் கொரோனா பரவிவிட்டது.
Samayam Tamil Flight


தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் துருக்கி - கொந்தளித்த இந்தியா!

இந்தியாவில் மட்டும் இதுவரை 56 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 90,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளுக்கு பயணிக்க சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

மேலும், இந்தியா, பிரேசில், அர்ஜெண்டினாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பயணிக்கவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியா, பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களுக்குள் இருந்த நபர்கள் சவுதி அரேபியாவுக்கு பயணிக்க தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு அரசுகளும் விடுத்த அழைப்பின் பேரில் பயணிக்கக்கூடிய நபர்களுக்கு மட்டும் பயண அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவில் இதுவரை 3.31 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3.13 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். மொத்தம் 4,542 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி