ரியாத் : சவுதி அரேபியாவின் துணை இளவரசராக பதவி வகித்து வந்து முகம்மது பின் சல்மான் இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இளவரசர் பதவி வகித்து வந்த முகம்மது பின் நயிப் பின் அப்துல்யாசில் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய இளவரசரை சேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் முகம்மது பின் சல்மானுக்கு 43 பேரில் 31 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
இதனையடுத்து சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லாஸிஸ் அல் சவுத், அவரது மகனான முகம்மது பின் சல்மானை இளவரசராக அறிவித்தார். இளவரசார நியமிக்கப்பட்டுள்ள முகம்மது பின் சல்மானுக்கு துணை பிரதமர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுநாள் வரை தான் பார்த்து வந்த பாதுகாப்பு துறை பொறுப்பும் முகம்மது பின் சல்மான் வசம் உள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னர் இளவரசராக பதவி வகித்து வந்த முகமது பின் நயிப் பின் அப்துல்லாஸிஸ் ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதனையடுத்து சவுதி அரசர் சல்மான் பின் அப்துல்லாஸிஸ் அல் சவுத், அவரது மகனான முகம்மது பின் சல்மானை இளவரசராக அறிவித்தார். இளவரசார நியமிக்கப்பட்டுள்ள முகம்மது பின் சல்மானுக்கு துணை பிரதமர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுநாள் வரை தான் பார்த்து வந்த பாதுகாப்பு துறை பொறுப்பும் முகம்மது பின் சல்மான் வசம் உள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னர் இளவரசராக பதவி வகித்து வந்த முகமது பின் நயிப் பின் அப்துல்லாஸிஸ் ஏன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.