ஆப்நகரம்

சொத்துக்களை ஒப்படைத்தால் ஊழல் குற்றவாளிகளுக்கு விடுதலை?

சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டவர்கள் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை செய்ய அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.

TNN & Agencies 17 Nov 2017, 6:06 pm
ரியாத் : சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டவர்கள் சொத்துக்களை ஒப்படைத்தால் விடுதலை செய்ய அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.
Samayam Tamil saudi authorities offer freedom deals to princes and businessmen
சொத்துக்களை ஒப்படைத்தால் ஊழல் குற்றவாளிகளுக்கு விடுதலை?


சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புத் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக இளவசர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என பலர் ஊழல் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை முழுமையாக அரசிடம் ஒப்படைத்தால் அவர்களை விடுதலை செய்ய ஆலோசனை செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து சவுதி அரேபிய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 208 பேர் ஊழலின் மூலம் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக தெரிகிறது.

Saudi authorities are negotiating settlements with princes and businessmen held over allegations of corruption, offering deals for the detainees to pay for their freedom, say people briefed on the discussions.

அடுத்த செய்தி