ஆப்நகரம்

சவுதி: அமெரிக்க வாழ் பத்திரிகையாளரைக் கொன்ற 5 பேருக்குத் தூக்கு!

சவுதி அரேபியா இளவரசர் குறித்து அமெரிக்கத் தனியார் பத்திரிகையில் கட்டுரை எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் குஷோகி கொலை வழக்கில் சவுதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Samayam Tamil 23 Dec 2019, 4:36 pm
சவுதி அரேபிய இளவரசரின் ஆட்சியை விமர்சித்து அமெரிக்கத் தனியார் பத்திரிகையில் கட்டுரை எழுதி வந்த ஜமால் கஷோகி என்பவரைக் கொலை செய்த வழக்கில் 5 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil images (21)


சவுதி தூதரகத்தில் வைத்து மர்மமான முறையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். பத்திரிகையாளரைக் கொலை செய்யப்பட்டது துருக்கி அரசாலே வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

தேச துரோக வழக்கில் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை

குறிப்பாகத் துருக்கி அரசு தன்னிடம் கஷோகி கொலை தொடர்பான வீடியோ ஆதாரம் உள்ளதாக சவூதி அரேபியாவுக்கு மிரட்டல் விடுத்த பின்தான் இந்த விவகாரம் வெளியே வந்தது. துருக்கியின் இந்த மிரட்டலுக்குபின் சவூதி அரேபியா, தூதரகத்தில் நடைபெற்ற சண்டை ஒன்றில் கஷோகி கொல்லப்பட்டிருக்கலாம் என மழுப்பலாக கூறி வந்தது.

அதன்பின் சவூதி அரசு, தனது உளவுப்பிரிவு துணைத் தலைவர் அகமது அல் அன்சாரி, அரசின் ஊடக ஆலோசகர் சவுத் அல் கதானி ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்தது. அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக 18 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் சவுதி அரேபியா தெரிவித்தது. எனினும், அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை.

கஷோகி அமெரிக்கா நியூயார்க்கில் வசித்து வந்தார். கஷோகி, சவூதி இளவரசர் முகமது பின் சலாம் இல் குறித்து தனது கட்டுரைகளில் எழுதியிருந்தார்.

இதன் காரணமாகச் சவுதி இளவரசர், கஷோகி மீது கடும் கோபம் கொண்டிருந்துள்ளார். இதனாலே கஷோகி கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலைக்குப் பின் சவுதி இளவரசர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது பின் நாளில் தெரியவந்தது.

நாத்தியம் பேசிய பாகிஸ்தான் பேராசிரியருக்கு மரண தண்டனை

இந்த கொலையை மறைக்க சவூதி இளவரசர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். எனினும், பத்திரிகையாளர் மரணத்திற்கு நியாயம் கேட்டு அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கேள்வி எழுப்பியதால், சவுதி அரசு விசாரணையைத் தொடங்கியது.


விசாரணையில் 18 பேர் உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் முன்னாள் அரசு அதிகாரிகள் உள்பட 5 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 8 பேருக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி