ஆப்நகரம்

சவுதி பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் இல்லை: இளவரசர் முகமது பின் சல்மான் அதிரடி

சவுதி அரேபியாவில், பெண்கள் பர்தா அணிவது கட்டாயமான ஒன்று அல்ல என்று அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Mar 2018, 6:22 pm
சவுதி அரேபியாவில், பெண்கள் பர்தா அணிவது கட்டாயமான ஒன்று அல்ல என்று அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 649847-muslimwomen-021018


சவுதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டு பெண்கள் அணியும் உடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ‘பெண்கள் பர்தா மற்றும் முகத்திரை அணிவது அவர்களது சொந்த விருப்பத்திற்குட்பட்டது.

பெண்கள் ஆண்களுக்கு நிகராக கண்ணியமான உடை அணிய வேண்டும் என்றுதான் இஸ்லாமிய மத கோட்பாடுகள் அறிவுறுத்துகிறது. முழுநீள பர்தாக்களை அணிவது கட்டாயம் இல்லை.

பெண்கள் அணிந்து கொள்ள விரும்பும் கண்ணியமான மற்றும் மரியாதையான உடை என்ன என்பதை அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சமீபத்தில், சவுதி பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளித்ததில், முகமது பின் சல்மான் முக்கிய பங்கு வகித்திருந்தார். தற்போது பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் கொண்டு வருவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

எனினும், உடைக் கட்டுப்பாட்டில் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் சவுதி அரசு இது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி