ஆப்நகரம்

சிரியாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 100 பேர் பலி

சிரிய நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

TOI Contributor 23 May 2016, 4:11 pm
பெய்ரூட்: சிரிய நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil seven bombs hit the two cities almost simultaneously on monday morning
சிரியாவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 100 பேர் பலி


சிரிய நாட்டில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. தொடர்ந்து 7 குண்டுகள் வெடித்ததில் சுமார் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜப்லெஹ் நகரில் 53 பேரும், டார்டஸ் நகரில் 48 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசு மற்றும் ஐஎஸ்-க்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதும், ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை அந்நாட்டு ராணுவம் அண்மையில் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி