ஆப்நகரம்

சிரிய குழந்தைகளை காப்பாற்றுங்கள்: டிரம்பிற்கு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி

சிரிய குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கூறி, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு 7 வயது சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.

TNN 25 Jan 2017, 11:25 am
இஸ்தான்புல்: சிரிய குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கூறி, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு 7 வயது சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil seven year old syrian twitter girl appeals to donald trump
சிரிய குழந்தைகளை காப்பாற்றுங்கள்: டிரம்பிற்கு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி


சிரியாவைச் சேர்ந்த சிறுமி பானா அல்-அமெத்(7), தன்னுடைய டிவிட்டர் கணக்கு மூலம் உலகப் புகழ் பெற்றவர். அலெப்போவில் நிகழும் தாக்குதல்கள், பொதுமக்களின் நிலை குறித்து தொடர்ந்து பதிவுகள் இட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தாக்குதல் தீவிரம் அடையவே, சிரியாவில் இருந்து துருக்கிக்கு சென்றார்.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, பானா அல்-அமெத் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சிரியாவில் நடைபெற்று வரும் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். அலெப்போவில் இருந்த தங்களுடைய பள்ளி குண்டுவெடிப்பில் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாகவும், அதில் தனது நண்பர்கள் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போது துருக்கியில் இருப்பதாகவும், அங்கு சுதந்திரமாக எங்கும் செல்ல முடிவதாகவும், ஆனால் செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளில் கொல்லப்பட்ட 3 லட்சம் பேரில், 15000 பேர் குழந்தைகள் என்று சுட்டிக் காட்டியுள்ளார். அதனால் சிரிய குழந்தைகளுக்கு உதவி புரியுங்கள் என்று டொனால்ட் டிரம்பிடம், சிறுமி பானா அல்-அமெத் வலியுறுத்தியுள்ளார்.

Seven-year-old Syrian girl Bana al-Abed, who came to international attention with her tweets giving a tragic account of the war in Aleppo, has written an open letter to new US President Donald Trump.

அடுத்த செய்தி