ஆப்நகரம்

தாறுமாறாக ஓடி மூன்று துண்டாக உடைந்த விமானம்; அப்படியே ஷாக்கான பயணிகள்!

விமானம் ஒன்று ஓடுபாதையில் சறுக்கி சென்று துண்டுகளாக உடைந்த சம்பவத்தில் சிலர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2020, 8:56 am
துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணத்தில் இருந்து சபிஹா கோக்சென் விமான நிலையத்திற்கு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 171 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.
Samayam Tamil Crash


இது போயிங் 737 ரக விமானம் ஆகும். இந்நிலையில் கோக்சென்னில் தரையிறங்கிய போது திடீரென மழை பெய்ததுடன் பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் விமானம் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

விமானிகள் எவ்வளவு முயன்றும் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி கொண்டே சென்றது. ஒருகட்டத்தில் விமானம் மூன்று துண்டுகளாக உடைந்து சிதறியது. இதில் துருக்கி நாட்டை சேர்ந்தவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

'போயிட்டு வரேன்'... கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தம்பதி... நெஞ்சை உலுக்கும் வீடியோ.!

157 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பயணிகளை பத்திரமாக மீட்டு கொண்டு சென்றனர். இதற்கிடையில் விமானத்தின் ஒரு பாகத்தில் தீப்பிடித்துக் கொண்டது.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. விமானங்கள் அனைத்தும் வேறு நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இதை விட நாகரிகமாக வேறென்ன செய்ய? ட்ரம்ப் உரையை அவையிலேயே கிழித்துப்போட்ட சபாநாயகர்

இதுபற்றி பேசிய இஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகாயா, மோசமான வானிலை காரணமாக பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சரியாக பயணிக்க முடியவில்லை. இதனால் 50-60 மீட்டர் தொலைவிற்கு சறுக்கி கொண்டு சென்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு மிகவும் வருந்துகிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று கூறினார்.

அடுத்த செய்தி