உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகத்தில் பரவி வருகிறது. நெருக்கடியில் தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு அரசுகள் நிவாரணங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பில் கட்டணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைசி தேதிக்குள் பில் கட்டணம் செலுத்த முடியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது என ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது.
மின்சாரம், தண்ணீர், கேஸ் ஆகியவற்றுக்கான பில்கள் 1000 திர்ஹாம்ஸ் வரையிலான கட்டணங்களுக்கு கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்படும். மேலும், 1000 திர்ஹாம்ஸுக்கு மேலான கட்டணங்களுக்கு 15 நாட்கள் வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த கூடுதல் கால அவகாசம் முடியும் வரை அபராதம் வசூலிக்கப்படாது என ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பண நெருக்கடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பில் கட்டணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைசி தேதிக்குள் பில் கட்டணம் செலுத்த முடியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது என ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது.
மின்சாரம், தண்ணீர், கேஸ் ஆகியவற்றுக்கான பில்கள் 1000 திர்ஹாம்ஸ் வரையிலான கட்டணங்களுக்கு கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்படும். மேலும், 1000 திர்ஹாம்ஸுக்கு மேலான கட்டணங்களுக்கு 15 நாட்கள் வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த கூடுதல் கால அவகாசம் முடியும் வரை அபராதம் வசூலிக்கப்படாது என ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பண நெருக்கடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.