ஆப்நகரம்

முட்டைக்கோஸ் வாங்கச் சென்றவருக்கு ஜாக்பாட்டில் ரூ.1.5 கோடி பரிசு!

மேரிலாண்ட்: கடைக்கு காய்கறி வாங்கச் சென்ற போது, பெண் ஒருவருக்கு ஜாக்பாட்டில் பரிசு விழுந்துள்ளது.

Samayam Tamil 6 Dec 2018, 9:04 pm
அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் வனிசா வார்ட். இவர் தனது தந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முட்டைக்கோஸ் வாங்க வேண்டும் என்று தந்தை கூறியுள்ளார்.
Samayam Tamil Jackpot


இதனால் ”க்ரோவிடன் உணவுப் பொருள்” கடையில் காரை நிறுத்தியுள்ளார். அங்கு சென்று வனிசா முட்டைக்கோஸ் வாங்கினார். பின்னர் ”வின் ஏ ஸ்பின்” ஸ்கிராட்ச் டிக்கெட் மீது விருப்பம் ஏற்பட்டு, அதனை வாங்கியுள்ளார்.

அதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார். இதையடுத்து டிக்கெட்டை ஸ்கிராட்ச் செய்து பார்த்துள்ளார். அதில் கேமின் டாப் பரிசு கிடைத்தது தெரியவந்தது. அதன்பிறகு ”வின் ஏ ஸ்பின்” கேமின் பெரிய சக்கரத்தைச் சுற்றி உரிய பரிசைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி, 1,00,000 அமெரிக்க டாலர் முதல் 5,00,000 அமெரிக்க டாலர் வரை பரிசாகப் பெறக் கூடிய சூழல் இருந்தது. இந்நிலையில் கேமின் சக்கரத்தைச் சுற்றிய வனிசாவிற்கு அதிர்ஷ்டவசமாக 2,25,000 அமெரிக்க டாலர்கள் பரிசு விழுந்துள்ளது.

இது இந்திய மதிப்பின் படி ரூ.1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டெம்பிள் ஹில்ஸில் வசித்து வரும் வனிசா, பரிசாகப் பெற்ற பணத்தை தனது ஓய்விற்கு பின் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

அதேசமயம் டிஸ்னி வோல்டிற்கு ஒரு பயணம் செல்லவும் முடிவு செய்துள்ளார். இந்த ஜாக்பாட் பரிசு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி