ஆப்நகரம்

சரியா ரோடு போட்டு தரலயாம்- மேயருக்கு இப்படியொரு தண்டனை அளித்த மக்கள்!

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மேயரை, பொதுமக்கள் லாரியில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 11 Oct 2019, 8:27 am
மெக்சிகோவில் சியாபாஸ் மாகாணத்தின் லாஸ் மார்கரிட்டாஸ் நகரின் மேயராக இருப்பவர் ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன் ஹெர்னாண்டெஸ் ஆவார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாலைகள் சீரமைத்து தரப்படும் என்று கூறியிருந்தார்.
Samayam Tamil Mayor


ஆனால் தேர்தலில் போட்டியிட்டு வென்று, பதவிக்கு வந்த பின்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் கோபமடைந்த விவசாயிகள் மேயரை லாரியில் கட்டி, அவரை தரதரவென இழுத்துச் சென்றனர்.

இலங்கை அதிபர் தேர்தல் : கோத்தபய ராஜபக்சவுக்கு ஆதரவு கரம் நீட்டும் சிறிசேன!!

இதுகுறித்து தகவலறிந்த வந்த போலீசார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேயரை விடுவித்தனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இந்த சம்பவத்தில் மேயருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு தேவையான வசதிகள் செய்துதர கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மேயரை தாக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே ஒருமுறை விவசாயிகள் தாக்கியுள்ளனர். இதேபோல் நமது நாட்டிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஏராளம் இருக்கின்றனர்.

இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கினால் திருந்துவார்கள், தங்கள் கடமையை ஒழுங்காக செய்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இங்கே போராடாமல் எதையும் அடைய முடியாது.

ஸ்டேடியங்களில் முதன்முறையாக பெண்களை அனுமதித்த ஈரான் அரசு.!

அடுத்த செய்தி