ஆப்நகரம்

அமெரிக்காவில் வாழும் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல்!

அமெரிக்காவில் வாழும் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Aug 2018, 2:20 pm
அமெரிக்காவில் வாழும் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ca 2
அமெரிக்காவில் வாழும் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல்!


அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மீது நிகழ்த்தப்படும் இனவெறித் தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அங்குள்ள சீக்கியர்களை முஸ்லீம்கள் என நினைத்து தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கலிபோர்னியாவில் வசித்து வரும் 50 வயது நிரம்பிய சீக்கியர் ஒருவர் மீது 2 வெள்ளையின நபர்கள் இனவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வாழும் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல்!


சம்பந்தபட்ட அந்த சீக்கிய நபர், கடந்த வாரம் கேயாஸ் மற்றும் பூட்டே சாலை சந்திப்பின் அருகே, உள்ளூர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெள்ளையின நபர்கள் அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். மேலும் , ‘உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை, உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ’ என்றும் அந்த நபர்கள் மிரட்டியுள்ளனர். அத்துடன் விடாமல் அவரது கார் மீது Go Back Your Country என்று ஸ்பிரே பெயிண்டால் எழுதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த சீக்கியர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கலிஃபோர்னியா போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி