ஆப்நகரம்

கொரோனா நோயாளிகளிடம் மன்னிப்பு கேட்ட சிங்கப்பூர் அரசு

தகவல்தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையின்போது தவறுதலாக இவ்வாறு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது எனக் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Samayam Tamil 19 May 2020, 12:24 pm
357 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனத் தவறுதலாக தகவல் அனுப்பியதற்காக சிங்கப்பூர் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
Samayam Tamil File Photo


சிங்கப்பூரில் 28 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த நாட்டில் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிகள் பலருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மெசேஜ் வந்திருக்கிறது. 357 பேருக்கு இவ்வாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்படும் ஆபத்து

இது குறித்து திங்கட்கிழமை அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தகவல்தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையின்போது தவறுதலாக இவ்வாறு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று பற்றிய பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. சில மணிநேரங்களில் இதற்கு முன் அனுப்பிய தகவல் தவறுதலானது என்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மற்றொரு தகவலும் அனுப்பப்பட்டது என அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனை: ஆக்ஸ்போர்டு தோல்வி!!

அடுத்த செய்தி