ஆப்நகரம்

இந்திய அன்னிய முதலீட்டில், சிங்கப்பூருக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி

பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் உடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

Samayam Tamil 1 Jun 2018, 12:32 pm
சிங்கப்பூர்: பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் உடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
Samayam Tamil PM Modi in Singapore


பிரதமர் மோடி ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலில் இந்தோனேசியா சென்ற அவர், நேற்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.

அங்கு அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங், அதிபர் அதிபர் ஹலிமா யாகூப் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், கடலோர பாதுகாப்பு, தளவாடங்கள் ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஆந்திர தலைநகர் அமராவதி கட்டமைக்கப்படுவதில் சிங்கப்பூர் உதவி வருகிறது.

புனே விமான நிலைய வளர்ச்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆராய, மகாராஷ்டிரா - சிங்கப்பூர் கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, சிறப்பான வரவேற்பு அளித்த லீ சியன் லூங்கிற்கு நன்றி.

இருநாட்டு உறவு வலுப்பெற தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஏராளமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில் வாய்ப்புகளுக்காக இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இணைய குற்றங்கள், பயங்கரவாத எதிர்ப்பில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் அன்னிய முதலீடு செய்ய சிங்கப்பூருக்கு முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது. இருநாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்து அதிகரிப்பிற்கு முயற்சி மேற்கொண்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.

Singapore is more important of India's FDI says PM Modi.

அடுத்த செய்தி