ஆப்நகரம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தடாலடி அறிக்கை வெளியிட்ட சிங்கப்பூர்.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழர்களுக்கு, சொந்த நாட்டின் அரசியலை சிங்கப்பூருக்குக் கொண்டு வரக் கூடாது என சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TNN 30 Oct 2017, 1:56 pm
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழர்களுக்கு, சொந்த நாட்டின் அரசியலை சிங்கப்பூருக்குக் கொண்டு வரக் கூடாது என சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Samayam Tamil singapore release the report about devar jayanthi
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தடாலடி அறிக்கை வெளியிட்ட சிங்கப்பூர்.!


பசும்பொன் முத்துராம லிங்கதேவரின் 216வது குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களும், சாதிய அமைப்பினரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேவர் ஜெயந்தி தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தரவு குறித்த வாட்ஸ் அப் தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



அதில், சிங்கப்பூர் காவல்துறையின் உயரதிகாரி, லூயிஸ் லோக் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேவர் ஜெயந்தி தொடர்பாக காவல்துறை அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்துவது மற்றும் அதில் பங்கேற்பது சட்ட விரோதமான செயல் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேவர் ஜெயந்திக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கூட்டம் கூடுவதும், முழக்க அட்டைகள் ஏந்துவதும் புகைப்படங்கள் எடுப்பதும் குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூருக்கு வரும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டின் அரசியலை சிங்கப்பூருக்குக் கொண்டு வரக் கூடாது என உத்தரவிட்டுள்ள காவல்துறை உத்தரவை மீறினால் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் வேலை அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Singapore release the report about devar jayanthi

அடுத்த செய்தி