ஆப்நகரம்

2000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பில் சிக்கிய ஊனமுற்றவரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

இத்தாலியில் வெசுவியஸ் எரிமலை வெடிப்பில் சிக்கிய ஊனமுற்றவர் ஒருவரின் எலும்புக்கூட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Samayam Tamil 30 Jun 2018, 3:58 pm
இத்தாலியில் வெசுவியஸ் எரிமலை வெடிப்பில் சிக்கிய ஊனமுற்றவர் ஒருவரின் எலும்புக்கூட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Samayam Tamil 4DC4B68100000578-5902457-image-a-37_1530305085656


இத்தாலியின் பாம்பெய் நகரில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வெசுவியஸ் எரிமலை வெடித்துச் சிதறியது. இதிலிருந்து தப்பிக்க முயன்று, உயிரிழந்த ஊனமுற்றவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கி.பி.79ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் இந்த எரிமலை வெடிப்பு நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, இந்த எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இந்த எலும்புக்கூட்டை ஆய்வு செய்ததில் இறந்தவருக்கு வயது 35 ஆற இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது

சாம்பல் படிமங்களுக்கு அடியில் புதைந்திருந்த எலும்புக்கூட்டுக்கு அருகில் பெரிய கல் ஒன்றும் இருந்திருக்கிறது. இந்த கல்லில் அடிபட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், எலும்புக்கூடு வாயைத் திறந்த நிலையில் இருப்பதால் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் இறந்திருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர் மஸ்ஸிமோ ஓசன்னா கூறுகிறார்.

அடுத்த செய்தி