ஆப்நகரம்

மீண்டும் முழு ஊரடங்கு? - கட்டுக்கடங்காத கொரோனாவால் அரசு முடிவு?

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Samayam Tamil 27 Oct 2021, 7:35 pm

ஹைலைட்ஸ்:

  • ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்
  • தினசரி பாதிப்பு மீண்டும் 35 ஆயிரத்தைக் கடந்தது
  • மீண்டும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil russia lockdown
ரஷ்யாவில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவின், வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், ஏ.ஒய் 4.2 என்ற பெயரில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய நாட்டில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்யாவில், 35 ஆயிரத்து 660 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகனுக்கு ABCDEF என பெயர் வைத்த தந்தை!
இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 லட்சத்து 41 ஆயிரத்து 643 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 1,072 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்றின் கோரத் தாண்டவத்தால், செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில், கடைகள், உணவகங்கள், அத்தியாவசிய சேவைகள் இல்லாத கடைகள், வரும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த செய்தி