ஆப்நகரம்

நடைபாதையில் கக்கா போகும் நாய்களை கண்டறிய டி.என்.ஏ டெஸ்ட்..!

ஸ்பெயின் நாட்டில் நடைபாதைகளில் மலம் கழிக்கும் நாய்களின் உரிமையாளர்களை கண்டறிய அவற்றின் மலத்திலிருந்து டி.என்.ஏ சோதனை நடத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Nov 2016, 10:03 am
ஸ்பெயின் நாட்டில் நடைபாதைகளில் மலம் கழிக்கும் நாய்களின் உரிமையாளர்களை கண்டறிய அவற்றின் மலத்திலிருந்து டி.என்.ஏ சோதனை நடத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil spains mislata district collects dog dna in anti poo campaign
நடைபாதையில் கக்கா போகும் நாய்களை கண்டறிய டி.என்.ஏ டெஸ்ட்..!


ஸ்பெயின் நாட்டில் உள்ள மிஸ்லாடா மாவட்டத்தில் நாய்களை வாக்கிங் கூட்டி வரும் அதன் உரிமையாளர்கள் அதனை சாலைகள் மற்றும் நடைபாதைகளில் மலம் கழிக்க விட்டுவிடுகின்றனர்.இதனால் அந்த வழியாக வருபவர்கள் முகம் சுழிப்பது மட்டுமின்றி,இதுகுறித்து மிஸ்லாடா நகர நிர்வாகத்திடமும் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய மிஸ்லாடா நிர்வாகம்,இனி சாலைகளில் நாய்கள் கழிக்கும் மலத்தின் மாதிரியை சேகரித்து,அதில் டி.என்.ஏ சோதனை நடத்தி நாயின் உரிமையாளரை கண்டறியும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்காக வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள்,நாயின் உரிமையாளர்கள் தங்கள் நாயின் ரத்த மாதிரிகளை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ரத்த மாதிரிகளை கொடுக்காதவர்களுக்கு 300 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும்,நடைபாதைகளில் தங்கள் நாய்கள் கழிக்கும் மலத்தை அகற்றாத உரிமையாளர்களுக்கு 200 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mislata municipality in eastern Spain is launching a dog DNA database in order to catch owners who allow their dogs to foul the pavements.

அடுத்த செய்தி