ஆப்நகரம்

கோவம் தீரும் வரை இந்த கடையில் பொருட்களை உடைக்கலாம்: சீனாவின் வினோத கடை!

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், பணம் கொடுத்து கோபம் தீரும் வரை பொருட்களை உடைக்கும் கடை ஒன்று தொடங்கப்படுள்ளது. இந்தகடைக்கு மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.

Samayam Tamil 14 Jan 2019, 5:38 pm
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில், பணம் கொடுத்து கோபம் தீரும் வரை பொருட்களை உடைக்கும் கடை ஒன்று தொடங்கப்படுள்ளது. இந்தகடைக்கு மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.
Samayam Tamil angerRoom-1024x576


சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கோவத்தை தீர்க்க புதிய கடை தொடங்கப்பட்டுள்ளது. கோவத்துடன் வருபவர்களுக்கு பாதுகாப்பு உடை மற்றும் பொருட்களை உடைக்க கட்டைகள் வழங்கப்படுகிறது.

பழைய கடைகளில் இருந்து இதற்கென டிவி, கடிகாரம், தொலைபேசி என பல்வேறு பொருட்கள் வாங்கப்படுகின்றன. இங்கு 30 நிமிடங்களுக்கு பொருட்களை உடைக்க இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதில் திருமணமான பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் கல்யாண புகைப்படங்கள் மற்றும் பொருட்களை கொண்டுவந்து உடைத்து துவம்சம் செய்கின்றனர். இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி